டெல்லியில் தனது ஆண் நண்பருடன் வாட்சப் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த பெண் விவாதம் முற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

watsapp

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியில் நியூஉஸ்மான்பூர்பகுதியை சேர்ந்த ஷிவானி சர்மா என்ற இளம்பெண் நடுஇரவில்தனது ஆண் நண்பருடன் வாட்ஸ்சப் வீடியோ காலில் இணைந்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே விவாதம் முற்ற தொடங்கியது. தான் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாக அந்த ஆண் நண்பரிடம் கூறிவிட்டு ஷிவானி அந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரிந்த உடனேஅந்த நபர் உடனே அந்த பெண்ணின் தந்தைக்கு கால் செய்துள்ளார். கீழ் மாடியில் இருந்த அந்த பெண்ணின் தந்தை ஷிவானியின் அறையை அடைவதற்குள் சடலமாக தூக்கில் தொங்கினார்.

இந்த சம்பவத்தை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக அந்த ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்,. மேலும் அந்த அந்த பெண்ணின் செல்போனை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கு என்ன காரணம்என்றும்மொபைலில் அதுபற்றிசந்தேக்கிக்ககூடிய ஆதாரங்கள் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

இதுபோல் அண்மையில் கோடாவில்நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த 18 வயது சிறுமி தனது தந்தையுடன் வாட்சப் வீடியோ காலில்பேசிக்கொண்டிருக்கும் பொழுது அறையில் தூக்கிட்டுக்கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.