Skip to main content

தலையில் குண்டு பாய்ந்த நிலையில் ஏழு கிலோமீட்டர் கார் ஓட்டிய இளம்பெண்!

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

தலையில் குண்டு பாய்ந்த நிலையில் பெண் ஒருவர் ஏழு கிலோ மீட்டர் கார் ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் வசித்து வருபவர் சுமித் கவுர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயுடன் காரில் சென்றுள்ளார். வண்டி சிக்னலில் நிற்கும் போது அங்கு வந்த ஹல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர், சுமித் கவுரை நோக்கி துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுள்ளார். 



இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர், தலையில் இருந்து வழிந்த ரத்தத்தை கூட பொருட்படுத்தாமல் 7 கிமீ தொலைவில் இருந்த காவல் நிலையத்திற்கு வண்டியை ஓட்டி சென்றுள்ளார். ரத்தம் வழிந்த நிலையில் இளம்பெண் வருவதை கண்ட காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் அவரை 10-வது படிக்கும் அவரின் அண்ணன் மகன்தான் துப்பாக்கியால் சுட்டார் என்பதை கண்டுபிடித்த காவலர்கள், அவரை கைது செய்துள்ளனர். சொத்து தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கிச் சூடு; தாம்பரம் அருகே பரபரப்பு

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Shooting at lawyer's house; Bustle near Tambaram

சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த மீனாம்பாள் தெருவில் தியாகராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞர் ஆவார். வழக்கம்போல் வழக்கறிஞர் தனது மனைவி, மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது திடீரென வீட்டுக்குள் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது ஜன்னல் வழியாக வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் அந்த பகுதியில் இருந்து ஓடிச் சென்றது தெரிந்தது.

வீட்டிற்குள் துப்பாக்கி குண்டு ஒன்று விழுந்து கிடந்தது. அந்த குண்டை பார்த்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றிருக்கலாம் என அச்சமடைந்து உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், வீட்டுக்குள் ஜன்னலை துளைத்து உள்ளே வந்த துப்பாக்கி குண்டை கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வில் அது சிறிய ரக துப்பாக்கியில் இருந்த வந்த குண்டு எனத் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து வழக்கறிஞர் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கியால் சுட்ட அந்த மர்ம நபர் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கறிஞர் என்பதால் வழக்குகள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் இவ்வாறு நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Next Story

துப்பாக்கியைத் துடைத்த காவலாளிக்கு நேர்ந்த சோகம்; ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனத்தில் பரபரப்பு

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Tragedy befell the security guard who wiped his gun; Busy at the ATM filling company

 

ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த காவலாளி துப்பாக்கியைத் துடைக்கும் போது தோட்டா பாய்ந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் செயல்பட்டு வரும் வங்கி ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த காவலாளி, பாதுகாப்பிற்காக டபுள் பேரரல் (இரட்டைக் குழல்) துப்பாக்கி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த துப்பாக்கியை அவர் இன்று துடைக்க முயன்றபோது தவறுதலாக விசை இயக்கப்பட்டதால் அதிலிருந்து வெளியேறிய குண்டு காவலாளியின் வயிற்றில் பாய்ந்தது. வயிற்றின் இடதுபுறத்தில் குண்டு பாய்ந்த நிலையில், மீட்கப்பட்ட அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.