ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிறையிலுள்ள முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவேசிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் தந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி செய்திருந்த அந்த மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 100 நாட்களுக்கு மேலாக திஹார் சிறையில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.