Skip to main content

பெரும் சரிவில் உள்நாட்டு உற்பத்தி!! கைவிடாத விவசாயம்...

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

GDP down

 

 

மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி. கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக -23.9% என  சரிந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்திருக்கிறது.

 

2020-2021 ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகமும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளது. அதில் இந்த நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீடு -23.9% என தெரிவித்துள்ளது.

 

மேலும், ஜி.டி.பி-ன் அளவை துறை ரீதியாகம் வெளியிட்டுள்ளது அதில் விவசாயம் தவிர்த்து மற்ற துறைகள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதன்படி,

 

எரிசக்தி மற்றும் எரிவாயு துறை: -7%

நிலக்கரித்துறை: -23.3%

தொழிற்துறை: -38.1%

உற்பத்தித்துறை: -39.3%

வணிகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு -47%

கட்டுமானத்துறை: -50.3%

 

ஆகியவை சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம் விவசாயத்துறை இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 3.4% அதிகரித்துள்ளது.

 

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் நடந்த 41வது ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பொருளாதாரம் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது, கரோனா கடவுளின் செயல்எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாட்டின் பொருளாதாரம் 13.5% வளர்ச்சி - மத்திய அரசு

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

The country's economy grew by 13.5%; Central government

 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம்  13.5% ஆக வளர்ந்துள்ளதாகத் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

 

கடந்த நான்கு ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச வளர்ச்சி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் "கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட 4% கூடுதல் வளர்ச்சியை நாடு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். 2022- 2023ம் ஆண்டில் வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்றும் நிதிப்பற்றாக்குறையை 6.4% என்ற வரம்பிற்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதற்கிடையே நிலக்கரி மின்சாரம் போன்ற ஆதாரத்துறைகளில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6 மாதங்களில் இல்லாத அளவு குறைந்து 4.5% தொட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

ஆனால் ரிசர்வ் வங்கி முதல் காலாண்டில் கணித்திருந்த 16.4% என்பதைவிட தற்போதைய வளர்ச்சி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

நாட்டின் பொருளாதார வளர்ச்சி - 7.3%: நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவு மோசமான சரிவு!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

indian economy

 

2020 - 2021 ஆண்டிற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி, -7.3 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கான வீழ்ச்சியாகும். 2020 - 2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24.38 சதவீதம்வரை குறைந்துள்ளது. இதற்கு கரோனா ஊரடங்கே காரணம் என கூறப்படுகிறது.

 

அதேநேரத்தில் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீத அளவு அதிகரித்துள்ளது. இந்தக் கடைசி காலண்டில் ஊரடங்குகள் நீக்கப்பட்டு, அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது, நாட்டின் நிதிநிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.