Skip to main content

உலகின் 2வது மிகப் பெரிய பணக்காரர் கவுதம் அதானி

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

Gautham Adani is the 2nd richest person in the world!

 

உலகில் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராக இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உயர்ந்துள்ளார். 

 

ஃபோர்ப்ஸ் இதழின் பெருமை பணக்காரர் பட்டியலின் படி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 12 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து, இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இதன் மூலம் ஏற்கனவே இரண்டாவது பெரும் பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளியுள்ளார் அதானி. 

 

அதானி குழும பங்குகளின் மதிப்பு உயர்ந்ததால், அவருடைய சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், சுரங்கம், உள் கட்டமைப்பு, மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் வர்த்தகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; அம்பானி, அதானி எந்த இடத்தில்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Publication of World Rich List

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், 200 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனரான தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், மீண்டும் உலகின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க், 198 பில்லியன் டாலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். லுயுவுட்டன் ஆடம்பரப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், 197 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கிறார். 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு தொழிலதிபரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, 104 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். 

Next Story

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் ராஷ்மிகா!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Rashmika Mandanna in 2024 Forbes India list of 30 under 30

ஃபோர்ப்ஸ் இதழின் இந்திய பிரிவான ‘ஃபோர்ப்ஸ் இந்தியா’ 2014 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் 30 வயதிற்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் மொத்தம் 19 பிரிவுகள் இருக்கும் நிலையில், பொழுதுபோக்கு துறையில் ராஷ்மிகா மந்தனா(27) மற்றும் ராதிகா மதன் (28) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் இசைத் துறையில் அதிதி சைகல் (25) என்கிற பாடகி இடம்பெற்றுள்ளார். இவர்களுக்கு தற்போது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இதில் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் கடந்த வருடம் வாரிசு, மிஷின் மஜ்னு, அனிமல் என மூன்று படங்களில் நடித்திருந்தார். இப்போது தனுஷின் 51வது படம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, லீட் ரோலில் ரெயின்போ உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.