ADVERTISEMENT

பெண்வேடமிட்ட கவுதம் கம்பீர்....

05:50 PM Sep 14, 2018 | santhoshkumar


கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பெண் வேடம் இட்டு திருநங்கைகளுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

ADVERTISEMENT

டெல்லியில் திருநங்கைகள் மட்டும் பங்கேற்கும் ‘ஹிஜாரா ஹப்பா’ எனும் விளையாட்டுப் போட்டி, கலைநிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் கம்பீர் கலந்துகொண்டு செய்த செயல்தான் தற்போது வைரலாகியுள்ளது. பலரை நெகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. அப்படி என்ன செய்தார் என்கிறீர்களா? திருநங்கைகளுடன் கலந்துகொண்டு தன்னை பெண்ணாக அலங்கரித்துகொண்டார். நெற்றியில் திலகமிட்டு, கையில் வளையல் அணிந்து, உதட்டில் சாயமிட்டு, துப்பட்டா அணிந்து பெண்ணாக மாறி விளையாட்டுப் போட்டிகளை கம்பீர் தொடங்கி வைத்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT