Skip to main content

தேர்வு சரியில்லை... கம்பீர் அதிருப்தி...

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

2020-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் கடந்த வியாழக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்றது.

 

gautam gambhir about kkr ipl team selection

 

 

சென்னை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் தொடருக்கான இந்த ஏலத்தின் ஏல பட்டியலில் 332 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் இருந்து ஒவ்வொரு அணியும், தங்களிடம் உள்ள பணத்திற்கு ஏற்ற வகையில் வீரர்களை ஏலத்தில் எடுத்தது.  இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), இயான் மோர்கன் (இங்கிலாந்து), வருண் சக்ரவர்த்தி (இந்தியா), டாம் பாண்டன் (இங்கிலாந்து), ராகுல் திரிபாதி (இந்தியா), கிறிஸ் கிரீன் (ஆஸ்திரேலியா), நிகில் சங்கர் நாயக் (இந்தியா), பிரவின் தாம்பே (இந்தியா), எம்.சித்தார்த் (இந்தியா) ஆகியோரை ஏலத்தில் எடுத்தது.  

இந்நிலையில் கொல்கத்தா அணி தேர்வு குறித்து கம்பீர் அதிருப்தி தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான கம்பீர் இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசுகையில், " கொல்கத்தா அணி கம்மின்ஸ்சை வாங்கி இருப்பது ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகும். ஒட்டு மொத்த கொல்கத்தா அணியை நீங்கள் பார்த்தால் ரஸல், இயான் மோர்கன், சுனில் நரேன் போன்ற வீரர்களுக்கு சரியான மாற்று வீரர்கள் இல்லை. ஒருவேளை மோர்கனுக்கு காயம் ஏற்பட்டால் மிடில் ஆர்டரில் விளையாட சரியான வெளிநாட்டு வீரர் அணியில் இல்லை. அணியை மேலும் வலுப்படுத்த கொல்கத்தா அணி நிர்வாகம் மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ்சை எடுத்து இருக்கலாம். அதேபோல் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் காயமடைந்தால், அவர்களுக்கு பதிலாக தகுதியான மாற்று வீரர்கள் இல்லை" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த தேதியில் மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்?; இறுதி போட்டி எப்போது? - வெளியான புதிய தகவல்!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

ipl 2021

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறுமென இந்திய கிரிக்கெட் வாரியம், அண்மையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தது.

 

இந்தநிலையில், தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குமென்றும், அக்டோபர் 15ஆம் தேதி தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

விராட் கோலி உடனான மோதல் குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

Suryakumar Yadav

 

 

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலிக்கும் தனக்குமிடையே நடந்தது என்ன என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரின் 48-ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிலைத்து நின்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி வீரரான சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.

 

மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் களத்தில் நிற்கும் போது பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி அவரை சீண்டும் விதமாக நடந்துகொண்டார். இந்திய அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத ஒருவரிடம், இந்திய அணியின் கேப்டன் இப்படியா நடந்து கொள்வது என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

 

இது குறித்து அவர் பேசுகையில், "அது களத்தில் உச்சகட்ட தருணம். எனக்கும் அவருக்கும் இடையே அதற்கு முன்பு எதுவும் நடக்கவில்லை. இந்த விஷயம் எப்படி இவ்வளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. விராட் கோலி அனைத்து போட்டிகளிலும் உற்சாகத்துடன் இருப்பதை பார்த்திருக்கிறேன். மும்பை அணிக்கு எதிரான போட்டி மட்டும் விதிவிலக்கல்ல. அது பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டி. போட்டிக்குப் பிறகு இயல்பாகத்தான் இருந்தார். நன்றாக விளையாண்டீர்கள் என்று அனைவரிடமும் கூறினார். இது சிறிய தருணம் மட்டும்தான். அந்த சூழ்நிலையில் எதிரணியில் முக்கியமான வீரர் யார் என்பது அவருக்கு தெரியும்" எனக் கூறினார்.