Skip to main content

"எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால்..." கவுதம் கம்பீர் கருத்து...

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்துவரும் நிலையில் தேர்தல் முடிவு குறித்து கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

gautam gambhir about delhi election results

 

 

கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 21 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு  தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி கவுதம் கம்பீர், "நாங்கள் டெல்லி தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால், எங்களால் மாநில மக்களின் நம்பிக்கையை பெறமுடியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சியின் கீழ் டெல்லி வளர்ச்சிபெறும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்