சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் வரி உயர்வின் காரணமாக தற்போது சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட ஒரு மானிய சிலிண்டரின் விலை ரூ.2.08 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல மானியம் இல்லாத சமையல் சிலிண்டரின் விலை ரூ.42.50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.