Skip to main content

கல்லூரி மாணவியுடன் தனிமை; வியாபாரியை சுத்துப் போட்ட பெஸ்டீஸ்

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

gang extorted money from a college student in Puducherry

 

புதுச்சேரி கூடப்பாகம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன்(50) என்பவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி கருணாகரன் வழக்கம் போல் தனது மளிகைக் கடையிலிருந்த போது கல்லூரி மாணவி ஒருவர், தான் பக்கத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். பெற்றோர்கள் இல்லாததால் கணுவாப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வருவதாகவும், தற்போது தனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் எனவும் கருணாகரனிடம் கூறியுள்ளார். 

 

இதனையடுத்து கருணாகரனின் மேல் வீடு காலியாக இருந்த நிலையில், தனது வீடு காலியாக இருப்பதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டையே தனக்கு வாடகைக்குத் தரும்படி மாணவி கூற, கருணாகரனும் சரி என்று சொல்லியுள்ளார். மேலும் இரண்டு நாட்கள் கழித்து தன்னை வந்து பார்க்கும்படி கருணாகரன் கூற, இருவரும் செல்போன் நம்பரை பகிர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தினமும் நீண்ட நேரம் ஃபோனில் பேசி வந்துள்ளனர். 

 

தொடர்ந்து ஃபோனில் பேசி வந்த இருவரும் அவ்வப்போது வெளியே சந்தித்தும் வந்துள்ளனர். இந்த நிலையில்தான் சம்பவத்தன்று இரவு கருணாகரனை அந்தப் பெண் தனிமையில் சந்திக்க வெளியே அழைத்துள்ளார். அதனையடுத்து கருணாகரனும் அந்தப் பெண்ணை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத கணுவாப்பேட்டை பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கருணாகரன் ஆடைகளைக் கழற்றியவுடன் அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். 

 

இதனைத் தொடர்ந்து உடனடியாக ரூ. 2 லட்சம் பணம் வேண்டும் இல்லையென்றால் வீடியோவை வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டியுள்ளனர். அதனால் கருணாகரன் கையில் எடுத்து வந்த ரூ. 50 ஆயிரத்தைக் கொடுத்துள்ளார். மேலும் தனது நண்பருக்குக் கால் செய்து ரூ. 75 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலமாக அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து கருணாகரனை மட்டும் அந்த கும்பல் விடுவித்த நிலையில், பதறிப் போன அவர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம நபருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் ஈட்டுப்பட்டது கணுவாப்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ்(21) மற்றும் ராமு(22) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், ராமு மனைவியின் நண்பர்தான் அந்தக் கல்லூரி மாணவி என்பதும் அவரை வைத்துத்தான் இந்த சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதாகவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், கல்லூரி மாணவி மற்றும் அவரது கூட்டாளி அருண் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.