ADVERTISEMENT
ADVERTISEMENT
குஜராத்தில் சொகுசு விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்.எல்.ஏ உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்ஹால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதி ஒன்றில் உள்ள சொகுசு விடுதியில் சூதாட்டம், மதுவிருந்து நடப்பதாக தகவல் வெளியானதையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சொகுசு விடுதியில் இருந்த இளம்பெண்கள் மற்றும் பாஜக எம்எல்ஏ கேசரி சிங் சோலங்கி உட்பட 25 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய 6 லட்சம் ரூபாய் பணம், வாகனங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
ADVERTISEMENT
Show comments