Skip to main content

70-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு கரோனா... தாமதமாகும் இஸ்ரோ திட்டங்கள்...

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

gaganyan may get delayed due to covid

 

இஸ்ரோவில் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் தாமதமாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இஸ்ரோ, வருகிற 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருந்தது. ரூ.10 ஆயிரம் கோடி செலவில் இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒருபுறம் விண்கலம் தயாரிப்பு மறுபுறம் ரஷ்யாவில் விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி என இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இஸ்ரோவில் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் ‘ககன்யான்’ திட்டம் தாமதமாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இஸ்ரோ தலைவர் சிவன் இதுகுறித்து தெரிவிக்கையில், "இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் பணியாற்றிய 70-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளதால் ஆகஸ்ட் 2022 -ல் திட்டமிடப்பட்டிருந்த ககன்யான் திட்டம் சற்று தாமதமாகலாம். குறித்த காலத்திற்குள் திட்டத்தைச் செயல்படுத்த இயலாத நிலை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ககன்யான் விண்வெளி வீரரைத் திருமணம் செய்த தனுஷ் பட நடிகை

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
actress leena married gaganyaan astronauts prashanth nair

தனுஷின் அனேகன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் கேரள நடிகை லீனா. தொடர்ந்து விக்ரமின் கடாரம் கொண்டான், திரௌபதி, நயன்தாராவின் ஓ2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு அபிலேஷ் குமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்பு 2013 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். 

இதையடுத்து தனது இரண்டாம் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ககன்யான் விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை மணந்துள்ளதாகத் தெரிவித்த அவர், திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி ககன்யான் வீரர்களை அறிமுகம் செய்த நிகழ்ச்சியில் பிரசாந்த் நாயருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இதனை அறிவித்துள்ளார். 

மேலும் அந்த பதிவில், “பிரதமர் மோடி, இந்திய விமானப்படை போர் விமானி கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயருக்கு முதல் இந்திய விண்வெளி வீரர் விருது வழங்கினார். நமது நாட்டிற்கும் நமது கேரள மாநிலத்திற்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுத் தருணம். நான் 17 ஜனவரி, 2024 அன்று பிரசாந்தை பாரம்பரிய முறைப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டேன்” என்றார்.