Skip to main content

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

Futures Deposit Fund Interest Rate Reduction

 

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

2021-2022ஆம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டிவிகிதம் 8.5 சதவிகிதத்திலிருந்து 8.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவே வருங்கால வைப்பு நிதியின் குறைந்தபட்ச வட்டிவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதார் இணைக்கப்படாவிட்டால் வைப்பு நிதி கட்!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

EPF fund cut if Aadhaar is not linked!

 

வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.) கணக்கில் ஆதார் எண்ணை இணைக்காத தொழிலாளர்களின் கணக்கில் இருந்து எந்தப் பரிவர்த்தணையும் செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு நடத்த முடியாது என அறிவுறுத்தியுள்ளது வருங்கால வைப்பு நிதி நிறுவனம்.

 

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை இ.பி.எஃப். அலுவலகத்தில் உறுப்பினர்களாக சம்மந்தப்பட்ட நிறுவனம் இணைத்துவிடும். அந்த தொழிலாளர்களுக்கு என தனி அக்கவுண்ட் உருவாகும். தொழிலாளர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் பணம், இ.பி.எஃப். அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.

 

இ.பி.எஃப். அக்கவுண்ட்டோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் அறிவுறுத்தியிருந்தது வருங்கால வைப்பு நிதி நிறுவனம். ஆனால், பலரும் ஆதார் எண்ணை இணைக்காமல் அலட்சியமாக இருந்தனர்.

 

இந்த நிலையில், இ.பி.எஃப். அக்கவுண்டில் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 1 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தும் இ.பி.எஃப். அலுவலக அதிகாரிகள், “தங்களின் இ.பி.எஃப். அக்கவுண்டில் ஆதார் எண்ணை தொழிலாளர்கள் இணைக்க வேண்டும். அப்படி இணைக்காதவர்கள், தங்களின் கணக்கிலிருந்து செப்டம்பர் 1க்குப் பிறகு பணத்தை எந்தத் தேவைக்காகவும் எடுக்க முடியாது. அதேபோல, ஆதார் எண்ணை இணைக்காத அக்கவுண்ட்டில், சம்மந்தப்பட்ட தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையையும் அவரது அக்கவுண்டில் செலுத்த முடியாது”  என்று அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

Next Story

பி.எஃப் வட்டிவிகிதம் 0.10% உயர்வு... புள்ளிவிவரம் சொல்லுவது என்ன...?

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 2018-2019 நிதியாண்டிற்கு 8.65 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

EPF

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் 2017-2018-ம் நிதியாண்டில் 8.55 சதவிகிதம் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்துவந்தது. இந்நிலையில், தற்போது அதில் 0.10 சதவிகிதம் உயர்த்தி 2018-2019 நிதியாண்டிற்கு 8.65 சதவிகிதமாக அதிகரித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. 
 

கடந்த மூன்று நிதியாண்டுகளாக உயர்த்தப்படாத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

மேலும், இந்த 8.65 சதவிகிதம், 2018-2019 நிதியாண்டுக் கணக்கிலிருந்து அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித அதிகரிப்பு வாயிலாக சுமார் 6 கோடி பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஐந்து நிதியாண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் எப்படி இருந்தது என்பதன் புள்ளிவிவரம்,
 

2012-2013 நிதியாண்டில் - 8.50%

2013-2014 நிதியாண்டில் - 8.75%

2014-2015 நிதியாண்டில் - 8.75%

2015-2016 நிதியாண்டில் - 8.80%

2016-2017 நிதியாண்டில் - 8.65%

2017-2018 நிதியாண்டில் - 8.55%

2018-2019 நிதியாண்டில் - 8.65%