ADVERTISEMENT

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம்... தொடங்கிவைத்த முதல்வர்...

12:53 PM Aug 13, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில், அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தொடங்கிவைத்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், அக்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாண்டுகளாக ஆட்சி செய்துவரும் நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் நேற்று தொடங்கிவைத்தார். இந்த ஆண்டின் நவம்பர் மாதத்துக்குள் 1,74,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT