Skip to main content

"வேளாங்கண்ணிக்கு இலவச புனித பயணம்" - தேர்தல் வாக்குறுதி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

Arvind Kejriwal

 

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அந்தந்த மாநிலக் கட்சிகளும், தேசிய கட்சிகளும் முழு அளவில் தயாராகி வருகின்றன.

 

இந்தச்சூழலில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் கோவா மாநிலத்திற்கு அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணம் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

 

இந்தநிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கோவா மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குப் பேசிய அவர் கிறிஸ்துவர்களுக்கு வேளாங்கண்ணி செல்ல இலவச யாத்திரையை ஏற்பாடு செய்வோம் எனக் கூறியுள்ளார்.

 

Arvind Kejriwal

 

கோவாவில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஊழல் கட்சிகள். அதனால்தான் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசுவதற்கு காங்கிரஸ் துணிவதில்லை. எதிர்த்துப் பேசினால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். கடந்த 10 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அல்லது அமைச்சர் மீது ஏன் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை?

 

காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்றன. அவர்கள் ஆட்சிக்கு வரும்போது மற்றொருவர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. கோவாவில் நாங்கள் ஆட்சி அமைத்தால், இந்துக்களுக்கு அயோத்திக்கும், கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணிக்கும் இலவச புனித பயணத்தை ஏற்பாடு செய்வோம். முஸ்லீம்களுக்கு, அஜ்மீர் ஷெரீப்புக்கும், சாய்பாபாவை வணங்குபவர்களுக்கு ஷீரடி கோயிலுக்கும் இலவச பயணத்தை ஏற்பாடு செய்வோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.