நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டைம்ஸ் நௌவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிக நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரம், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெருவாரியாக வெற்றி பெரும் கட்சி ஆட்சி நாற்காலிக்கு மிக அருகில் செல்ல வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தால் இவை அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.
அதிலும் குறிப்பாக 80 தொகுதிகளைக் கொண்ட ஸ்டார் மாநிலமாகக் கருதப்படும் உத்திரபிரதேசத்தில் பாஜக 27 இடங்களையும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் 51 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களையும் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உ.பி யில் உள்ள வாரணாசியில் நரேந்திர மோடியும் ரேபரேலி அல்லது அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடலாம் என்றிருக்கும் எதிர்பார்ப்புகள் குறிப்பிடத்தக்கவை.
48 தொகுதிகளை உடைய மஹாராஷ்டிர மாநிலத்தில் பாஜக 43 இடங்களையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 5 இடங்களையும் பெறும் என்றும் 42 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 32 இடங்களையும் பாஜக 9 இடங்களையும் காங்கிரஸ் 1 இடத்தை மட்டும் பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தைப் பொருத்தவரைக்கும் 40 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 25 இடங்களையும் காங்கிரஸ் 15 இடங்களையும் பெறலாம் என்று முடிவு வந்திருக்கிறது.
|
ஆட்சி நாற்காலிக்கு அருகில் இருப்பது யார்? - கருத்துக்கணிப்பு முடிவுகள்
சார்ந்த செய்திகள்
Next Story
இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு சதவீதம்; வெளியான விவரம்!
18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது.
இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக 79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.