தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம். நரசிம்மராவ்,அடல்பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இவர், கடந்த 2000ஆம் ஆண்டு காலமானார்.ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவிகிட்டி குமாரமங்கலம், டெல்லியில் வசித்துவந்தார்.
இந்தநிலையில் அவர், நேற்று (06.07.2021) இரவுஅவரது வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியின்போது கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது வீட்டிற்கு சலவைக்காரராகபணிபுரிந்துவந்தவர்கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கொலையில் சம்பந்தப்பட்ட இருவரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
இந்தக் கொலை சம்பவம் பற்றி போலீசார்கூறுகையில், "இரவு 9 மணி அளவில் வீட்டுக்குச் சலவை செய்யும் தொழிலாளி கதவைத் தட்டியுள்ளார். வீட்டில் வேலை செய்யும் பெண் கதவைத் திறந்தபோது, அவரை ஓரு அறையில் அடைத்துவைத்துவிட்டு,கிட்டி குமாரமங்கலத்தைத் தலையணையை வைத்து அழுத்திக்கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டனர். பிறகு வீட்டு வேலை செய்யும் பெண் தப்பித்து, சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.கொலை நடந்த இடத்தில் பல சூட்கேஸ்கள் உடைத்து திறக்கப்பட்டிருந்தன என்பதால் கொள்ளை முயற்சி நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்" என கூறியுள்ளனர்.