Skip to main content

ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் மீண்டும் நீட்டிப்பு!

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது சிபிஐ தரப்பில் ப.சிதம்பரத்திடம் 400- க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவரிடம் இன்னும் பல கேள்விகள் கேட்க வேண்டி உள்ளதால் சிபிஐ காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

former union minister p chidambaram custody extend cbi special court order



இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள், ப.சிதம்பரத்துக்கு எதிராக எந்த ஒரு ஆவணமும், ஆதாரமும் சிபிஐயிடம் இல்லை என்று வாதிட்டனர். இதனிடையே ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருக்க விருப்பம் தெரிவித்ததால், செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 


 

சார்ந்த செய்திகள்