ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது சிபிஐ தரப்பில் ப.சிதம்பரத்திடம் 400- க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவரிடம் இன்னும் பல கேள்விகள் கேட்க வேண்டி உள்ளதால் சிபிஐ காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள், ப.சிதம்பரத்துக்கு எதிராக எந்த ஒரு ஆவணமும், ஆதாரமும் சிபிஐயிடம் இல்லை என்று வாதிட்டனர். இதனிடையே ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருக்க விருப்பம் தெரிவித்ததால், செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.