Skip to main content

அருண் ஜெட்லியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி!

Published on 25/08/2019 | Edited on 25/08/2019

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி உயிரிழந்தார். 

 

former union minister  For the body of Arun Jaitley  Political party leaders pay tribute

 


இதனையடுத்து அருண் ஜெட்லியின் உடல் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அருண் ஜெட்லியின் உடல் இன்று காலை 10.00 மணியளவில் தீன்தயாள் உபாத்யாய் சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் மதியம் 02.00 மணியளவில் நிகம்போத் கட்டில் தகனம் செய்யப்படவுள்ளது.

 

former union minister  For the body of Arun Jaitley  Political party leaders pay tribute

 

 

இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் சென்று அருண் ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு ஜெட்லியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல் பாஜக கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா அருண் ஜெட்லியின் உடலுக்கு  நேரில் அஞ்சலி செலுத்தினார். மத்திய அரசு சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அருண் ஜெட்லியின் உடலுக்கு  நேரில் மரியாதை செலுத்தினார். 

 

 

former union minister  For the body of Arun Jaitley  Political party leaders pay tribute


அதனை தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் ஜெட்லியின் உடலுக்கு  நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 

 

former union minister  For the body of Arun Jaitley  Political party leaders pay tribute

 

 

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு ஜெட்லியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் ஜெட்லியின் உடலுக்கு  நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

former union minister  For the body of Arun Jaitley  Political party leaders pay tribute

 

காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ஜெட்லியின் உடலுக்கு  நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 

former union minister  For the body of Arun Jaitley  Political party leaders pay tribute


வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அருண் ஜெட்லியின் மறைவு செய்தியை அறிந்து, அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அமீரகத்தில் இருந்து மீண்டும் பிரான்ஸ் செல்கிறார். இதன் காரணமாக அருண் ஜெட்லியின் இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.