கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே.சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மீதுதற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

 Former Karnataka minister TK Sivakumar arrested

கடந்த 2017 ஆம்ஆண்டுடி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகள் என 84 இடங்களில் வருமான வரித்துறைசோதனை செய்தது. அப்போது அவர்வீட்டிலிருந்து 8.59 கோடியைவருமான வரித்துறையினர்பறிமுதல் செய்தனர். 8.59 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அதுதொடர்பாகவிசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில்அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு நாள் விசாரணைக்கு பின் டி.கே.சிவகுமாரை கைதுசெய்ததுள்ளதுஅமலாக்கத்துறை. காங்கிரஸ்-மஜதகூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது எம்எல்ஏக்களை தக்கவைக்க முயன்றவர் டி.கே.சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.