former governor satya pal malik talks about last parliament election related issue 

சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராகப் பதவி வகித்தபோது அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

Advertisment

சமீபத்தில் சத்யபால் மாலிக், “மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மை காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சிஆர்பிஎப் வீரர்கள் சாலை மார்க்கமாகச் சென்றார்கள்.

Advertisment

சாலை மார்க்கமாக அவர்கள் சென்றபோதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை. அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு. விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால், பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்றும், அமைதியாக இருக்கும்படியும் கூறினார். தேசிய பாதுகாப்புச் செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனப் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மீண்டும் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. அப்போது, சத்யபால் மாலிக் புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காகத்தான் பழைய வழக்கில் மீண்டும் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டது என்று பலரும் கூறினர். இருப்பினும் சத்யபால் மாலிக் கடந்த மாதம் 28 ஆம் தேதி சிபிஐயிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி சத்யபால் மாலிக்கின் உதவியாராக இருந்த சுனக்பாலி என்பவருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 11 இடங்களில் நடைபெற்றது. மேலும் ஜம்முவில் உள்ள சுனக்பாலின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆடிட்டர்களான சஞ்சய் நாரங், வீரேந்திர சிங் ராணா, கன்வர் சிங் ராணா, பிரியங்கா சௌத்ரி, அனிதா ஆகியோர் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியது.

former governor satya pal malik talks about last parliament election related issue 

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பன்சூர் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால்மாலிக் பேசுகையில், "கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நமது ராணுவ வீரர்களின் சடலங்கள் மீது நடத்தப்பட்டது. இது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலகி இருக்க வேண்டும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட ஏராளமான அதிகாரிகள் சிறைக்கு சென்றிருக்க வேண்டும். மத்திய அரசை மக்கள் உடனடியாக மாற்ற வேண்டும். மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு (பாஜக) வாக்களித்தால் நீங்கள் மற்றொரு முறை வாக்களிக்கும் வாய்ப்பை பெறமாட்டீர்கள். அதன் பிறகு உங்களை வாக்களிக்க விடமாட்டார்கள். ஒவ்வொரு முறையும் அவரே வெற்றி பெறுவதால் எதற்கு தேர்தலுக்காக செலவிடுவது என்று கூறுவார்கள்" எனப் பேசினார்.