முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பொது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் சுஷ்மா சுவராஜ் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்.
இந்திய அரசியலில் ஒரு புகழ் பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. சுஷ்மா சுவராஜ் மறைவால் ஒட்டுமொத்த இந்தியாவும் வருந்துகிறதுஎன குறிப்பிட்டுள்ளார்.அதே போல் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.