முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின்உடல்நிலை தொடர்ந்துகவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லிக்கு மருத்துவ குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ராஜ்நாத்சிங் எய்ம்ஸ் வந்த நிலையில் பிரதமர் மோடியும் எய்ம்ஸ் வரஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உடல்நலம் பாதிக்கப்டட்டதை அடுத்துகடந்த ஒன்பதாம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.