Skip to main content

மருத்துவமனை வெளியேற்றியதால் பிறந்தவுடன் இறந்த குழந்தை

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

மத்திய பிரதேசத்தில் டின்டோரி மாவட்டத்தில் மருத்துவ நிர்வாகம் பிரசவம் பார்க்க மறுத்ததால் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியிலுள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

சமராவதி தேவி(24) எட்டு மாத கர்ப்பிணி. இவருக்கு கடந்த திங்கள் காலை மூன்று மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  . வலி அதிகமானதால் அங்கிருந்த செவிலியர்களிடம் தனக்கு பிரசவ வலி தாங்க முடியவில்லை, பிரசவம் பார்க்குமாறு கூறியுள்ளார். அவர்கள் இவரை கண்டுகொள்ளாததால் கோபமடைந்தவர் வலி தாங்கமுடியாமல் அவர்களை அறைந்துள்ளார்.

 forced   leave the hospital

இதனால் கோபமடைந்த செவிலியர்கள் அவரையும் உறவினரையும் வலுக்கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியுள்ளனர் . வீட்டிற்கு போகும் வழியில் மீண்டும் பிரசவ வலி எடுக்க ஓரிடத்தில் அமர்ந்து வலிபொறுக்காமல் கதறியுள்ளார்.  அவரின் உறவினர்கள் அங்குள்ள பெண்களின் உதவியை நாடியுள்ளனர் . உதவிக்கு வந்த பெண்கள்  திறந்தவெளியில் சுற்றிலும் புடவையை வைத்து மறைத்துக்கொண்டு பின் அவர்களே பிரசவம் பார்த்தனர்.

 forced   leave the hospital

சமராவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது, இதில் பரிதாபமான செய்தி என்னவென்றால் அந்த ஆண் குழந்தை இறந்து பிறந்தது. அதைப்பார்த்து தன் பிள்ளையை கையில் வைத்துக்கொண்டு கதறி அழுதார். சமராவதி இது குறித்து கூறியது." எனக்கு பிரசவ வலி ஏற்பட்டவுடன் என் உறவினர்கள் என்னை மருத்தவமனையில் சேர்த்தனர். அப்போது எனக்கு வலி அதிகமாக இருந்தது எனவே எனக்கு உடனடியாக பிரசவம் பார்க்கும்படி கூறினேன். ஆனால் என்னுடைய வலியை செவிலியர்கள் புரிந்துகொள்ளாமல் என்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர். அதனால்தான் தற்போது என் குழந்தை இறந்துவிட்டது" என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.