இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன் - முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு!

NIRMALA SITHARAMAN

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகளைமட்டுமின்றி பொருளாதார இழப்புகளையும்இந்தக் கரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியது. இதற்கிடையே கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (28.06.2021) மாலை 3 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில், பொருளாதார நிவாரணத்திற்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் நிலை நகரங்களில்சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

corona virus Nirmala Sitharaman
இதையும் படியுங்கள்
Subscribe