ஏனாமில் வெள்ளம்... 1000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் சிக்கியது!

Floods in Enam... More than 1000 houses were flooded!

புதுச்சேரி மாநிலம் ஏனாமில் ஏற்கனவே 14 மீனவ கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 1000க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Floods in Enam... More than 1000 houses were flooded!

புதுச்சேரியில் ஏனாம் வட்டாரம் ஆந்திர மாநிலத்தின் கோதாவரி ஆற்றுப்படுகை பகுதியில் அமைந்துள்ள ஒரு பகுதி. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளான டெவலீஸ்வரன், பாலயோகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இதனால் பாதுகாப்பான இடங்களுக்கு அப்பகுதி மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மீட்புப்படை வீரர்கள், தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில்தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

flood Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe