Advertisment

நிரம்புகிறது வீடூர் அணை: புதுச்சேரி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

புதுச்சேரியில் உள்ல வீடூர் அணையில் 30.5 அடி வரைக்கும் தண்ணீர் நிரம்பிவிட்டது. அதன் முழு கொள்ளளவே 32 அடிதான் என்ற நிலையில், நாளைக்குள் வீடுர் அணை முழுவதுமாக நிரம்பிவிடும். அதனால் நாளை விடியற்காலைக்குள் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இவ்வாறு திறக்கப்பட்டால் புதுச்சேரி எல்லைப் பகுதியான சுத்துக்கேணிக்கு வெள்ளம் வரும் நிலை உள்ளது. இதோபோலவே சங்கராபரணி ஆற்றிலும் தண்ணீர் அதிக அளவில் வரும். எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Advertisment

 Puducherry

மேலும் பொதுமக்கள் தங்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், தேவையின்றி ஆற்றில் இறங்கக் கூடாது, ஆற்றில் வெள்ளம் வரும்போது செல்பி எடுக்க கூடாது, தாழ்வான பகுதியில் வசிப்போர் மேடான பகுதிக்கு உடனே செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

flood Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe