ADVERTISEMENT
இதனையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்குத் தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
ADVERTISEMENT
இந்நிலையில் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் தொடர்பாக டெல்லியில் உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த உயர்நிலைக் கூட்டத்தில் தமிழகத்தின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெள்ளத்திற்கு பிந்தைய நிலவரம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Show comments