Skip to main content

மலேசியாவில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க விமானம் அனுப்பப்படும்- மத்திய அரசு தகவல்

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மலேசியாவிலிருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்களையும், பயணிகளையும் மீட்க இந்திய வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதில் மலேசியாவில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களில் 150 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

 

Flight to rescue Indian students trapped in Malaysia

 

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நிறைய  இந்திய மருத்துவ மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்கள் நாடு திரும்புவதற்காக வந்திருந்த நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கரோனா பாதிப்பு காரணமாக மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான தடையை இந்திய அரசாங்கம் பிறப்பித்திருந்தது. இதனால் 200 மாணவர்களும் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் ஏர் ஏசியா விமானங்கள் மூலம் மாணவர்கள் டெல்லி மற்றும் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என தற்பொழுது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.