Skip to main content

மேம்பாலத்தில் சிக்கிக்கொண்ட விமானம்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

flight from Kochi to Hyderabad got stuck on a road flyover

 

வெளிநாடுகளில் பழைய விமானங்களை வாங்கி, அதில் ஹோட்டல் நடத்துவது மிகவும் பிரபலம். அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பிஸ்தா கவுஸ் என்ற நிறுவனம் மக்களைக் கவர்வதற்காகப் பழைய விமானங்களை வாங்கி ஹோட்டலாக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது. 

 

இதற்காக அந்நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து பழைய விமானம் ஒன்றை ஏலத்தில் வாங்கி சாலை மார்க்கமாக ஒரு பெரிய லாரியின் மூலம் ஹைதராபாத்திற்குக் கொண்டு சென்றது. அப்போது, ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே வந்தபோது மேதரமெட்லா என்ற பகுதியில் அமைந்திருந்த மேம்பாலத்தின் அடியில் விமானம் சிக்கிக் கொண்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இதைப் பார்க்க குவிந்த மக்கள் விமானம் சிக்கிக்கொண்டதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில், அது வைரலானது. 

 

இதனிடையே தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு மேம்பாலத்தில் சிக்கிக்கொண்ட விமானத்தை முழுவதுமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன் பிறகு அந்த விமானம் வேறு வழியில் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.