Skip to main content

சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கக் கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Fishermen  demanding to ban  short nets


சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறி, அரசு சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதித்துள்ளது. தற்போது மீன்பிடி தடை விலகி மீன்பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளில் ஒருதரப்பு மீனவர்கள் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இதேபோல் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று மற்றொரு தரப்பு மீனவர்களும் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். 

 

புதுச்சேரி கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலான 18 கிராம மீனவர்கள் கடந்த 19ஆம் தேதிமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

இந்த நிலையில், விசைப்படகு, ஃபைபர், எஃப்.ஆர்.பி படகு, கட்டுமர உரிமையாளர்கள், மீனவர்கள் ஆகியோர் புதுச்சேரியில் காந்தி சிலை எதிரே கடலில் படகுகளுடன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 120 விசைப்படகுகள், ஃபைபர் படகுகள், எஃப்.ஆர்.பி கட்டுமர படகுகளுடன் 250க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், மீனவர்கள் கடலில் நின்றபடி போராட்டம் நடத்தினர்.

 

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் புதுச்சேரியில் சுருக்குமடி வலை பயன்பாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இந்தப்போராட்டம் குறித்து செய்தியாளரிடம் பேசிய புதுச்சேரி ஃபைபர் படகு உரிமையாளர்கள், "புதுச்சேரியில் சுருக்குமடி வலை பயன்படுததி மீன்பிடிக்க அரசு அனுமதிக்கக் கூடாது. இதனால் மீனவர்களுக்குள் பிளவு ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழல் உருவாகும். எனவே இதைப் புதுச்சேரி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் படகுகளுடன் கடலில் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்" என்றனர்.

 

தலைமைச் செயலகம் முன்பு நடந்த போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்தப் போராட்டத்தையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில், கிழக்கு எஸ்.பி ரக்க்ஷனா சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.