Skip to main content

நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தனியார் ரயில்... பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

For the first time in the country, a private train in Tamil Nadu ... Do you know the fare?

 

கோவையில் இருந்து நேரடியாக சீரடிக்கு தனியார் பங்களிப்புடன் நாளை (14/06/2022) முதல் ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில், இந்த ரயிலில் அப்படி என்ன ஸ்பெஷல்? ரயில் பயணத்திற்கான கட்டணம் என்ன? போன்ற விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

 

மத்திய அரசின் கீழ் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான, ரயில்வே துறையில் இனி ரயில்களை வாடகைக்கு எடுக்கலாம் என அறிவித்து, கடந்த நவம்பர் மாதம் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தது இந்தியன் ரயில்வே துறை. 'பாரத் கவுரவ்' என்று அறிமுகமாகியுள்ள இந்த திட்டத்தின் நோக்கம், தனியார் பங்களிப்புடன் சுற்றுலாவைப் பிரபலப்படுத்துவது தான். வாடகைக்கு ரயிலை எடுப்பதின் மூலம் டிக்கெட் கட்டணத்தை சுற்றுலா ஆப்ரேட்டர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் ஆஃபர். 

 

அதிலும், ஆன்மீக பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் ஆக அமையவிருக்கிறது இந்த சிறப்பு ரயில்வே திட்டம். அந்த வகையில் கோவையில் இருந்து சீரடிக்கு வாராந்திர ரயில் சேவை நாளை (14/06/2022) முதல் தொடங்கவிருப்பது சாய்பாபா பக்தர்களை மகிழ்வித்துள்ளது. 

 

அதுவும், இந்த ரயில் சேவை ஆந்திர மாநிலம் வழியாக வழியாக மகாராஷ்டிரா செல்லவிருப்பதால், சாய்பாபாவோடு சேர்த்து ஆந்திராவில் உள்ள ராகவேந்திரா சுவாமி கோயில் அமைந்துள்ள மந்திராலயத்திற்கும் பக்தர்கள் சிரமமின்றி சென்று வர முடியும். இப்படி ரிலாக்ஸாக சாய்பாபாவைச் சென்று தரிசித்து வர ரயில் கட்டணம் மற்றும் பேக்கேஜ் கட்டணம் என இரண்டு விதமான கட்டணங்கள் உள்ளன. 

 

பேக்கேஜ் என்பது கோவையில் இருந்து சீரடிக்கு சென்று திரும்பும் ரயில் கட்டணத்துடன் சேர்த்து, சீரடியில் சிறப்பு தரிசனம், மூன்று பேர் தங்கும் ஏசி ரூம் வசதி, டூர் வழிகாட்டி மற்றும் பயண இன்சூரன்ஸ் ஆகியவை அடங்கும். ஆனால் உணவு மற்றும் ஆந்திராவில் உள்ள மந்திராலயம் கோயிலில் தரிசிக்க வேண்டும் என்றால், அதற்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டும். 

 

கோவை- திருப்பூர்- ஈரோடு- சேலம்- பெங்களூரு- மந்திராலயம் வழியாக சீரடி செல்லும், இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் பெறுவது மிகவும் சுலபம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து சாய்பாபா கோயில்களிலும் பயண டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். 

 

தனது முதல் பயணத்திற்கு ஆயத்தமாகியுள்ள கோவை டூ சீரடி ரயில் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு மேற்கொண்டார். 

 

இந்த ரயிலில் பயணிக்க செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்துப் பார்ப்போம்! 

ரயில் கட்டணமாக ஸ்லீப்பருக்கு ரூபாய் 2,500, மூன்றாம் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 5,000, இரண்டாம் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 7,000, முதல் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 10,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேக்கேஜ் கட்டணமாக, ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்க ரூபாய் 4,999, மூன்றாம் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 7,999, இரண்டாம் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 9,999, முதல் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 12,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.