Skip to main content

முதல் மக்களவை முதல் 16-வது மக்களவை வரை பெண்களின் பங்களிப்பு !

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

இந்தியாவில் வாழும் பெண்கள் அனைவருக்கும் கல்வி , வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் 33% இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் மசோதா கொண்டு வர வேண்டும் என பல்வேறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உதாரணமாக 33% இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் மக்களவையில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில் சுமார் 179 பெண் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து ஒவ்வொரு மக்களவையிலும் அங்கம் வகித்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்க்கலாம்.

 

woman 1



1. முதல் மக்களவை "First Lok sabha" (1952) ஆம் ஆண்டு இடம் பெற்ற பெண் உறுப்பினர்கள் 24 பேர் மட்டுமே ஆகும்.

2.இரண்டாம் மக்களவை "2nd Lok sabha" (1957) ஆம் ஆண்டு இடம் பெற்ற பெண் உறுப்பினர்கள் 24 பேர் மட்டுமே ஆகும்.

3. மூன்றாவது மக்களவை "3rd Lok sabha"  (1962-1967) ஆம் ஆண்டு இடம் பெற்ற பெண் உறுப்பினர்கள் 37 பேர் மட்டுமே ஆகும்.

4. நான்காவது மக்களவையில் "4th lok sabha" 33 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றனர்.

5. ஐந்தாவது மக்களவையில் "5th Lok Sabha" 28 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றனர்.

6. ஆறாவது மக்களவையில் "6th Lok sabha" 21 பெண் உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

7. ஏழாவது மக்களவையில் "7th lok sabha" (1980-1984)  32 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

8. எட்டாவது மக்களவையில் "8th Lok Sabha"  (1984-1989) 45 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

9. ஒன்பதாவது மக்களவையில் " 9th lok sabha" (1989) 28 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

10.  10-வது மக்களவையில் "10th Lok Sabha" (1991-1996) 42 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

11. 11 - வது மக்களவையில் "11th Lok Sabha"  41 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

12. 12- வது மக்களவையில் "12th Lok Sabha" 44 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

13. 13-வது மக்களவையில் "13th Lok sabha" 52 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

14. 14-வது மக்களவையில் "14th Lok Sabha" 52 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

15. 15-வது மக்களவையில் " 15th Lok Sabha" (2009-2014) 64 உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

16. 16-வது மக்களவையில் "16th Lok Sabha" (2014-2019) 66 உறுப்பினர்கள் அதிகப்பட்சமாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

woman



இந்திய வரலாற்றில் முதன் முறையாக 15-வது மக்களவையில் மக்களவை சபாநாயகராக திருமதி . மீரா குமார் பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக 16-வது மக்களவையில் மக்களவை சபாநாயகராக திருமதி . சுமித்ரா மகாஜன் பதவியேற்றார்.எனினும் மாநிலங்களவையில் பெண் உறுப்பினர் சபாநாயகர் பதவியில் அமர்ந்தது இல்லை. 

 

woman



காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மக்களவை தேர்தலிலும் தங்களது தேர்தல் அறிக்கையில் ( 2009, 2014) மத்தியில் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என உறுதியளித்தது. 2009 -ல் மத்தியில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கூட்டணி பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தவறிவிட்டது. இருப்பினும் 2019- மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைந்தால் மீண்டும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளது. 

2014- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக கட்சி தங்கள் மத்தியில் ஆட்சி அமைந்தால் கட்டாயம் பெண் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவித்த நிலையில் , இந்த மசோதாவை நிறைவேற்ற தவறிவிட்டது தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசு. மார்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சிகள் 1999, 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் நிச்சயம் பெண் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய 2019- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மீண்டும் வாக்குறுதி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நிலையில் இந்திய ஒர் ஜனநாயக நாடு என்பதை உறுதிப்படுத்தவும் , அதற்கு மேலும் வலுவூட்டவும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா வரும் காலங்களில் மிக அவசியமானது என்றால் எவராலும் மறுக்க முடியாது.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.