இந்தியாவில் கரோனாவால்அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாகமஹாராஷ்ட்ராஇருந்து வருகிறது. நாடு முழுவதும் முதல் மற்றும் இரண்டாவது கரோனாஅலை ஏற்பட்டபோது அம்மாநிலத்தில் கரோனாபரவலை கட்டுப்படுத்துவதுமிகவும் சவாலாக விளங்கியது.
அதிலும்குறிப்பாக தாராவி பகுதியில், கரோனாவைகட்டுப்படுத்துவது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. இந்தநிலையில்தாராவி பகுதியில் ஒருவருக்கு ஒமிக்ரான்வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர்தான்சானியாவில் இருந்து திரும்பிய நபர் என்றும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்என்றும் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் கூறியுள்ளது.
மேலும் அந்த நபருக்கு கரோனாஅறிகுறிகள் இல்லையெனவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் கூறியுள்ளது.