fj

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவை பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாக பரவிக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் தொற்று இருந்த வந்த ஆந்திராவில் தற்போது கரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இன்று மட்டும் 10,080 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் அரசு தரப்பில் இருந்து வரவில்லை.