ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல்... பலியான தொண்டர்...

ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.

fight between ysr congress and telugu desam party workers

இந்நிலையில் ஆந்திராவில் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் தொணடர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார். அனந்தபூர் மாவட்டத்தின் பத்தலப்பள்ளி மண்டல் என்ற இடத்தில் இரு கட்சியினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த மேலும் 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Andhra Chandrababu Naidu jaganmohanreddy
இதையும் படியுங்கள்
Subscribe