Fee for withdrawing money from ATM more than five times!

Advertisment

மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் மையங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைகளுக்கும் தற்போது உள்ள கட்டணத்தில் 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கிலிருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதற்கு மேல் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதற்கான கூடுதல் கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

Advertisment

தற்போது ஏடிஎம் மையங்களின் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள் அதிகரித்துள்ளதாக வங்கிகள் தெரிவித்திருந்தனர். எனவே, ஏடிஎம் மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணமாக தற்போது வசூலிக்கப்பட்டு வரும், 20 ரூபாய் கட்டணத்துடன் கூடுதலாக 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.