Skip to main content

2.69 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்த அந்நிய நேரடி முதலீடு...!

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

ff

 

அந்நிய நேரடி முதலீட்டின், நடப்பு நிதியாண்டில் 11 சதவீதம் முதலீடு குறைந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு 22.66 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதுவே கடந்த 2017-18 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 25.35 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என தெர்விக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 2.69 பில்லியன் அமெரிக்க டாலர் குறைவு. இதனை சதவீதத்தில் கணக்கீடும்போது கடந்த நிதியாண்டைவிட இந்த நிதியாண்டின் அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதில் இந்தியாவில், 2018-19 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நிதியாண்டில் அதிகளவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் சிங்கப்பூர் 8.62 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதலிடத்தில் உள்ளது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.7,220 கோடி மோசடியில் ஈடுபட்ட பிரபல நகைக்கடை... அமலாக்கத்துறை நோட்டீஸ்...

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

sri ganesh jwellery foreign investment issue

 

ரூ.7,220 கோடி அந்நிய முதலீட்டு மோடி செய்த ஸ்ரீ கணேஷ் ஜூவல்லரி ஹவுஸ் நகைக்கடைக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

 

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ கணேஷ் ஜூவல்லரி ஹவுஸ் என்ற நகைக்கடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 20 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 5 தனியார் வங்கிகளிடம் இருந்து ரூ.2,672 கோடி கடன் பெற்று அதனைத் திருப்பி செலுத்துவதில் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்குத் தொடர்பாக நிலேஷ் பரேக் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

 

அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அந்த நகைக்கடை வெளிநாட்டு ஏற்றுமதி என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்துள்ளதை அமலாக்கத் துறையினர் கண்டறிந்துள்ளனர். ரூ.7,220 கோடி அளவுக்கு இந்த விவகாரத்தில் மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மூவர் மீது அன்னிய செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

 

 

Next Story

அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க புதிய திட்டத்தை மத்திய அரசு தயார் செய்கிறது... - சுரேஷ் பிரபு

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

அந்நிய நேரடி முதலீட்டை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 7 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தயார் செய்து வருவதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தொழில் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
 

suresh prabhu

 

கடந்த 21-ம் தேதி அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 7% குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

2017-2018 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 35.94 பில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா அந்நிய முதலீடாக பெற்று இந்தது.
 

அதே 2018-2019 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 33.49 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாக பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட 7% குறைவு என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் கடந்த 21-ம் தேதி தெரிவித்திருந்தது. 


இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தொழில் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, 2017-18 நிதி ஆண்டில் மொத்த அந்நிய நேரடி முதலீடு 61 பில்லியன் டாலராக இருந்தது. இதை விரைவில் 100 பில்லியன் டாலராக உயர்த்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றனத் தெரிவித்துள்ளார். 
 

ரஷ்யாவுடன் வைர இறக்குமதியைச் செய்ய இந்தியா திட்டமிட்டிருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இந்தியாவுக்கு மூலப் பொருட்கள் கிடைப்பதும், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதும் சாத்தியமாகும். இதுபோன்ற பல திட்டங்களின் மூலம் பிற உலக நாடுகளுடன் இந்தியா இணைந்து வர்த்தகம் செய்து வளர்ச்சியை நோக்கி நகரும் என்றும் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.