ADVERTISEMENT

இந்திய ஐ.டி. உலகின் தந்தை காலமானார்...

12:29 PM Nov 27, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய ஐ.டி. உலகின் தந்தை என அழைக்கப்படுபவரும், டி.சி.எஸ். நிறுவனத்தின் நிறுவனரும் முதல் தலைமை செயல் அதிகாரியுமான ஃபகீர் சந்த கோலி (96) நேற்று காலமானார்.

1924 ஆம் ஆண்டு பெஷாவரில் பிறந்த இவர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும், கனடாவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் கனேடிய ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றிய இவர், ஆகஸ்ட் 1951 ஆரம்பத்தில் இந்தியா திரும்பி, டாடா எலக்ட்ரிக் நிறுவனத்தில் சேர்ந்தார். அப்போது, மும்பை முதல் புனே தடத்தில் டாடா நிறுவன மின் சேவைப் பணிகளை கணினிமயமாக்கியத்தில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.

அதன்பிறகு டாடா நிறுவனத்தின் கனவுத்திட்டமான தகவல் தொழில்நுட்ப துறையின் அந்நிறுவனம் கால்பதிக்க அடித்தளமிட்ட இவர், செப்டம்பர் 1969-ல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் பொது மேலாளரானார். பின்னர், 1974 ஆம் ஆண்டில், அந்நிறுவனத்தின் இயக்குநராகவும், 1994 ஆம் ஆண்டு டி.சி.எஸ் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அதேபோல 1968 இல் மும்பையில் தொடங்கப்பட்ட டி.சி.எஸ். நிறுவனத்தின் முதல் தலைமை செயல் அதிகாரி எஃப்.சி.கோலி ஆவார். தனது 94 ஆவது வயது வரை தகவல் தொழில்நுட்பத்துறைக்காக பணியாற்றிய இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்திய ஐ.டி துறையின் தனத்தை என அழைக்கப்பட்ட இவரது இறப்பிற்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எஃப்சி கோலி, தகவல் தொழில்நுட்ப உலகிற்கு தனது தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பங்களிப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். தொழில்நுட்ப துறையில் புதுமை மற்றும் சிறப்பான கலாச்சாரத்தை நிறுவனமயமாக்கியதில் அவர் முக்கிய நபராக இருந்தார். அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் எனது வருத்தம்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT