Skip to main content

தொலைந்து போன மகனை 17 ஆண்டுகளாக தேடிய தந்தை... இறுதிவரை முகம் பார்க்காமல் இறந்த சோகம்! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

The father who searched for his lost son for 17 years ...kerala incident

 

17 ஆண்டுகாலமாக காணாமல்போன மகனை தேடிவந்த தந்தை கடைசிவரை குழந்தையின் முகத்தைப் பார்க்காமலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் சிபிஐ போலீசார் விசாரித்தும் கூட காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் வருந்தத்தக்க செய்தி.

 

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மினி. இவர்களுக்கு ராகுல் என்ற மகன் இருந்தான். மகன் மீது பேரன்பு வைத்திருந்த பெற்றோர் 'ராகுல் நிவாஸ்' என்ற பெயரில் வீட்டையும் கட்டியிருந்தனர். ராஜு குவைத் நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி வீட்டுக்கு அருகே இருந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ராகுல் காணாமல் போனார். இந்த தகவலை கேள்விப்பட்ட ராஜு அடுத்தநாளே இந்தியாவிற்குத் திரும்பி, இதுதொடர்பாக மகனை கண்டுபிடித்துத் தரவேண்டும் என போலீஸில் புகார் அளித்தார். ஒருபக்கம் பெற்றோர் தரப்பிலும் குழந்தை தேடப்பட்டது.

 

கேரள போலீசார், கேரள புலனாய்வுத்துறை என அனைத்து தரப்பிலும் காணாமல்போன குழந்தை தேடப்பட்ட நிலையில், கடைசியில் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் காணாமல்போன ராகுலை தேடி வந்தனர். ராகுல் காணாமல் போன பிறகு இவர்களுக்கு சிவானி என்ற பெண் குழந்தையும் பிறந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை என வழக்கை சிபிஐ முடித்துக் கொண்டது. இதற்கான அறிக்கையை கொச்சி நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்தது. சிபிஐயின் அறிக்கையை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. கேரள வரலாற்றில் இந்த வழக்கு மிகவும் மர்மம் நிறைந்த வழக்காக தற்பொழுத வரை இருக்கிறது. மகன் காணாமல் போனது தந்தை ராஜுவின் மனநிலையைச் சேதப்படுத்திய நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த ராஜு மீண்டும் குவைத்துக்கு வேலைக்குச் சென்று உடல்நலம் சரியில்லாமல் மீண்டும் தாய்நாடு திரும்பினார். இந்தநிலையில் 17 ஆண்டுகளாக காணாமல்போன தனது மகனின் முகத்தை பார்க்க முடியாமல் தவித்து வந்த ராஜு, கடந்த 22ஆம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல வினோத வழக்குகளைச் சந்தித்துவரும்  கேரள மக்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது இந்த செய்தி.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.