Advertisment

11 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை; பரோலில் வெளியே வந்த தந்தையின் வெறிச்செயல்!

Father who incident 11-year-old daughter on convict out on parole in chattisgarh

சத்தீஸ்கர் மாநிலம், கோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 36 வயது நபர். இவர் மீது பல பாலியல் வழக்குகள் உள்ளது. அந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

இதனையடுத்து, அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் பரோல் வழங்கியது. அதன்படி, பரோலில் வெளியே வந்த அவர், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமாவது கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதில் பயந்த போன, அந்த சிறுமி இதைப்பற்றி வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.

Advertisment

அதனை தொடர்ந்து, அக்டோபர் 21ஆம் தேதியன்று தனது 13 வயது அண்ணன் மகளை விறகு சேகரிப்பதற்காக காட்டிற்கு அழைத்து சென்று அண்ணன் மகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனது மகளை மிரட்டியதை போலவே, அண்ணன் மகளையும் அவர் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில், தைரியத்தை வரவழைத்த பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பரோலில் வெளியே வந்த குற்றவாளி, மகளையும் அண்ணன் மகளையும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Investigation police incident chattishghar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe