A father incident happened who his son in andhra

பாதுகாப்புப்பணியின்போது பணம் கேட்டு தொல்லை செய்ததால்மகனைத்தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குசேஷக்குமார்என்ற மகன் உள்ளார். காவலர் பிரசாத்,மதுப்பழக்கம் காரணமாகவீட்டுக்குச்சம்பளப்பணத்தைத்தராமல் இருந்துள்ளார். இதனால், குடும்ப உறுப்பினர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதற்கிடையே, நேற்றுடன் நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் கொண்ட பழைய மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஒருகுடோனில்வைக்கப்பட்டுள்ளது. அந்தகுடோனில்காவலர் பிரசாத்பாதுகாப்புப்பணியில்ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது மகன்சேஷக்குமார், பிரசாத்திடம் ஏ.டி.எம்கார்டைகேட்டுள்ளார். அதற்கு அவர் தரமுடியாது என்று கூறியுள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பிரசாத், தனதுகையிலிருந்துதுப்பாக்கியைக்கொண்டு மகன்சேஷக்குமாரின்மார்பில் சுட்டார். இதில், படுகாயமடைந்தசேஷக்குமார்ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்தபோலீசார், உயிரிழந்தசேஷக்குமாரின்உடலை மீட்டுபிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,மகனைக்கொன்ற காவலர் பிரசாத்தைபோலீசார்கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மகனைத்தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Advertisment