Skip to main content

9 வது நாளாக உண்ணாவிரதம்... மோசமடைந்து வரும் மேதாபட்கர் உடல்நிலை...?

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு ஒரு நதியை பற்றியது. ஆம் மோடி மக்களைப் பார்த்து இப்படித்தான் கூறினார்.

"நாட்டு மக்களே குஜராத் மாநிலத்தில் ஒரு அழகான நதி உள்ளது அதுதான் சர்தார் சர்வேயர் நதி இதன் நீண்ட அழகு உங்களை பிரமிக்க வைக்கும் இந்த நதியை காண வாருங்கள்" என மோடியின் அறிவிப்பு இருந்தது. இந்த செய்தியும் சர்தார் சர்வேயர் நதியை பற்றியதுதான். 

 

 Fasting 9th day ... worsening Medapatkar body condition ...?

 

மகாநதியான பிரம்மபுத்ராவில் தொடங்கும் நர்மதை ஆறு மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா என மூன்று மாநிலங்களுக்கு பரந்து விரிந்து சென்று எக்காலத்திலும் வற்றாத ஜீவநதியாக இது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மூன்று மாநில விவசாயத்திற்கும் மக்களின் குடிநீருக்கும் முழுமையாக பயன்கொடுக்கும் இந்த நதி ஒவ்வொரு வருடமும் கடலில் ஏராளமான நீரை வீணாக கலக்கிறது. இந்த நர்மதை ஆற்றில் உள்ள மிகப்பெரிய அணைதான் குஜராத்தில் உள்ள சர்தார் சர்வேயர் அணை. இந்த அணை பற்றி நீண்ட நெடிய வரலாறு உண்டு. இந்த அணை நீர் வெளியேறும் இடத்தில்தான் சமீபத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை மிகப் பிரமாண்டமாக நிறுவப்பட்டிருக்கிறது. 

 

 Fasting 9th day ... worsening Medapatkar body condition ...?

 

ஏற்கனவே இந்த நர்மதை ஆற்றை பாதுகாக்கக்கோரி சமூக சேவகர் மேதா பட்கர் 1994இல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து 24 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அந்த செய்தி இந்தியா முழுக்க அப்பொழுது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்திய தலைவர்கள் பலர் உண்ணாவிரதமிருந்த மேதாபட்கரை நேரில் சந்தித்து அந்த உண்ணாவிரத்தை முடித்து வைத்தனர்.

 

 Fasting 9th day ... worsening Medapatkar body condition ...?

 

அதேபோல்தான் இப்போது சமூக போராளியான மேதா பட்கர் இன்றுடன் 9-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். உணவு மட்டுமல்லாமல் குடிநீர் கூட அருந்தாமல் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் அவரது கோரிக்கை என்பது இந்த அணை பற்றிதான். இந்த சர்தார் சர்வேயர் அணை உயரம்  ஆரம்பத்தில் 122 மீட்டர் இருந்தது அதன் பிறகு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி வந்த போது 128 மீட்டராக  உயர்த்தப்பட்டது.

இந்த அணை உயரம் உயர்த்தப்படும் போதெல்லாம் இந்த அணையை சுற்றி வாழ்கிற பழங்குடிமக்கள் கிராமவாசிகளின் வாழ்விடங்கள் அணை நீரால் சூழப்பட்டு தங்களது வீடுகள் மட்டுமில்லாமல் வாழ்வாதாரத்தையும் இழக்கிறார்கள். இப்போது இந்த அணையின் உயரம் என்பது 139 மீட்டராக உள்ளது. அணையில் தேக்கப்பட்டிருக்கிற தண்ணீர் 138 மீட்டர். இதனால் மத்திய பிரதேசத்திலுள்ள சுமார் 192 கிராமங்கள் இந்த அணைக்குள் மூழ்கி வருகிறது. இந்த கிராமத்தில் வாழும் மக்கள் முழுமையாக தங்களது வீடுகளை இழந்து விவசாய நிலங்களை இழந்து இப்பொழுது நடுத்தெருவில் உள்ளார்கள்.

 

 Fasting 9th day ... worsening Medapatkar body condition ...?

 

இதை மையமாக வைத்துதான் மேதாபட்கர் இந்த அணையின் உயரத்தை நீட்டிக்க கூடாது மேலும் இந்த அணையில் தேக்கப்பட்டுள்ள நீர் இருப்பை 128 அடியாக குறைக்க வேண்டும் இந்த அணை நீரை சுற்றியுள்ள மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அவர்களுக்கு தேவைப்படும் இழப்புகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திதான் இன்றோடு தொடர்ந்து ஒன்பதாவது நாளாக தன்னுடைய உடலை வருத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
 

மத்திய அரசு மேதா பட்கரின் உண்ணாவிரதத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இவர் உண்ணாவிரதம் இருக்கும் இடம் மத்திய பிரதேசத்திலுள்ள பட்வானி என்ற பகுதியாகும், மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் அரசு மேதா பட்கர் உண்ணாவிரத்தை முடித்து கோரி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் இந்த அணை உள்ள குஜராத் மாநில அரசு எந்த பதிலும் கூறாமல் உள்ளது. குஜராத் மாநில அரசும், மத்திய அரசும் மேதாபட்கர் விஷயத்தில் கவனம் செலுத்தாதது இந்தியா முழுக்க உள்ள சமூக சிந்தனையாளர்கள், சமூகவியல் செயல்பாட்டாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 Fasting 9th day ... worsening Medapatkar body condition ...?


அதுமட்டுமில்லாமல் மேதா பட்கரின்  உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது. தற்போது அவர் பேசும் திறனையும் இழந்து வருகிறார் என கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் அவரது உயிருக்கு ஆபத்து நேரலாம் என அஞ்சுகிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள். மேதா பட்கரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இந்தியாவில் ஒரு செய்தியாக பெரும்பாலான ஊடகங்கள் வெளியிடவில்லை என்பதும் வேதனையான ஒன்று.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.