Advertisment

டெல்லி போராட்டத்தில் இருந்து விலகும் விவசாய அமைப்புகள்!

vm singh

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேளாண்சட்டங்களுக்கு எதிராக, விவசாய அமைப்புகள்போராடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று விவசாயிகள் நடத்தியபேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் மீது சீக்கியர்களின் புனிதக் கொடிஏற்றப்பட்டது.

Advertisment

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவிவசாயக் குழுக்களில் ஒன்றானராஷ்டிரிய கிசன் மஜ்தூர் சங்கதன், போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.இதுகுறித்து ராஷ்டிரிய கிசன் மஜ்தூர் சங்கதன் அமைப்பின்தேசியஒருங்கிணைப்பாளர்வி.எம்.சிங், "வேறுவகையான நோக்கம் கொண்டவர்களுடன் போராட்டத்தைமுன்னெடுக்கமுடியாது. எனவே அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால்வி.எம்.சிங்கும்,ராஷ்டிரிய கிசன் மஜ்தூர் சங்கதனும்உடனடியாக போராட்டத்திலிருந்து விலகுகிறோம். குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். ஆனால், எங்களது போராட்டம் இந்த வடிவத்தில், என்னோடுதொடராது.மக்களைத் தியாகம் செய்யவோ அல்லது அடிவாங்கவோநாங்கள் இங்கு வரவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், பாரதியகிசான்யூனியன் (பானு) என்ற அமைப்பும் போராட்டத்தில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகஅந்த அமைப்பின் தலைவர், டெல்லியில் நேற்று நடந்தவற்றாலும், எங்களின் 58 நாள் போராட்டத்தைமுடித்துக் கொள்வதாலும் மிகுந்த வேதனையடைந்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

withdrawal farm bill Farmers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe