Skip to main content

முற்றுகையிட்ட விவசாயிகள்... ஒரு மணிநேரம் காருக்குள்ளேயே தவித்த ரோஜா...

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தொழில்துறை வளர்ச்சிக் கழகத் தலைவருமான ரோஜாவை விவசாயிகள் முற்றுகையிட்டதால் சுமார் ஒருமணிநேரம் வரை ரோஜா காருக்குள்ளேயே அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது.

 

farmers seiged rojas car

 

 

ஆந்திர அரசு அம்மாநிலத்திற்கு மூன்று தலைநகர் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதனை அமராவதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், அமராவதியில் நீருகொண்டா பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த ரோஜாவை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டனர். ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் வேண்டாம், அமராவதியே நிரந்தர தலைநகரமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கோஷமிட்டனர். இந்த முற்றுகை காரணமாக சுமார் ஒரு மணிநேரம் ரோஜா அப்பகுதியில் சிக்கித்தவித்தார்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, "தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சமூக விரோதிகளை சந்திரபாபு நாயுடு கட்டவிழித்து விட்டுள்ளார். மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதாலேயே ஜெகன்மோகன், 3 பகுதிகளில் தலைநகரங்களை அமைக்க வேண்டுமென கூறியுள்ளார். அமராவதியில் சந்திரபாபு நாயுடு சுமார் 4,000 ஏக்கர் நிலத்தை பினாமி பெயர்களில் வாங்கி குவித்துள்ளார்.அதனால்தான், தற்போது தலைநகரை மாற்றப்போகிறோம் என அறிவிப்பு வந்த உடன், சந்திரபாபு நாயுடு பதற்றமடைந்துள்ளார்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.