Skip to main content

போராட்டத்திற்கு மத்தியில் விவசாயிகளின் கல்வி சேவை!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

schools at farmers site

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் தீர்வு எட்டப்படாத நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதவரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

 

விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. அதனையடுத்து சிங்கு எல்லையிலும் கலவரம் நடந்தது. இத்தனைக்கும் மத்தியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், குழந்தைகளுக்குப் பள்ளியையும் நடத்தி வருகிறார்கள். கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட பின்னர், பள்ளிகளுக்குச் செல்லாமல் வீடுகளில் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும், விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு குப்பைகளையும், பாட்டில்களையும் பொறுக்க வந்த குழந்தைகளுக்கும் விவசாயிகள் பாடம் நடத்தி வருகிறார்கள். இதில் படிக்கும் சில குழந்தைகள் இதுவரை பள்ளிக்கே சென்றதில்லை.

 

விவசாயிகள் நடத்தி வரும் இதுபோன்ற பள்ளியில், சிங்கு எல்லையில் 160க்கும் மேற்பட்ட குழந்தைகளும், காசிப்பூர் எல்லையில் 70 - 80 குழந்தைகளும் படித்து வருகின்றனர். இதுபற்றி அந்தப் பள்ளிகளில் பாடம் நடத்தி வரும் போராட்டக்காரர் கூறுகையில், “முதலில் நங்கள் குழந்தைகளை இங்கு இழுத்து வர வேண்டும் என நினைத்தோம். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவர்களை இங்கு அழைத்து வர எந்த முயற்சியும் எடுக்க வேண்டிய தேவையில்லை. முதலில் எங்கள் மொழியை அவர்கள் மீது திணிக்க கூடாது என்பதற்காக, இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே அவர்களுக்குப் பயிற்றுவித்தோம். ஆனால் சில குழந்தைகள் பஞ்சாபி கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பியதால், பஞ்சாபி மொழியையும் கற்றுக்கொடுக்க ஆரம்பிதோம்” எனக் கூறியுள்ளார்.

 

ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தில், நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.