Advertisment

"இனிப்புகளுக்குள் விஷத்தை மறைப்பதே அரசின் யுக்தி" - மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்!

farmers

மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதற்கு முன், அரசுக்கும் விவசாயிகளுக்கும் நடந்த ஒன்பது கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், 10வதுகட்ட பேச்சுவார்த்தையின்போது, வேளாண் சட்டங்களை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள்நிறுத்திவைக்கதயாராக இருப்பதாகவும், விவசாயிகள் போராட்டத்தைகைவிட வேண்டுமெனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

Advertisment

இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வந்த விவசாயிகள், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisment

இதுதொடர்பாக,கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு என்ற விவசாயகுழு, "எங்கள் மீது வலையை வீசுவது, இனிப்புகளுக்குள் விஷத்தை மறைப்பதேஅரசின்யுக்தி. போராட்டத்தை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள். எங்கள் கூட்டத்தில், அவர்களின் கோரிக்கையை நிராகரிப்பதாக ஒரு மனதாகதீர்மானித்துள்ளோம்" எனகூறியுள்ளது.

மேலும் அந்த அமைப்பு, இன்றைய பேச்சுவார்த்தையின்போது குறைந்தபட்ச ஆதரவிலைமற்றும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது பற்றி விவாதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

farmland farm bill Farmers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe