bharathiya kishan union

மத்திய அரசின்புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிரானபோராட்டம், இன்றுடன் 16 வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போராட்டத்தைதீவிரப்படுத்தவிவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Advertisment

இந்தநிலையில், நேற்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரதியகிஸான்யூனியன் என்ற விவசாய சங்கத்தினர், "மத்திய அரசு எங்களின் 15 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை ஏற்றுகொள்ளும்போது, வேளாண்சட்டமசோதாக்கள்தவறு என்றுதானே அர்த்தம். பிறகு ஏன் அந்த சட்டங்களை அழிக்ககூடாது. நாங்கள், குறைந்தப்பட்ச ஆதரவிலைக்கு ஒரே சட்டம் வேண்டுமெனகோரிக்கை வைத்தோம். ஆனால் மத்திய அரசு, 3 மசோதாக்களை அவசரசட்டமாககொண்டுவந்துள்ளனர் எனகூறியதோடு, எங்கள் போராட்டம் அமைதியாக தொடரும்எனவும்தெரிவித்தனர்.

Advertisment

இந்தநிலையில், பாரதியகிஸான்யூனியன் (பனு) அமைப்பு, மத்திய அரசின்வேளாண் சட்டங்களுக்கு எதிராகவழக்கில், வாதாடுவதற்கு அனுமதி கோரிஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்துள்ளது.