இது நடைபெறும்வரை விவசாயிகளின் போராட்டம் வாபஸ் பெறப்படாது - விவசாய சங்க தலைவர் அறிவிப்பு!

rakesh tikait

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் பிரதமர் மோடி, இன்று (19.11.2021) வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

மேலும்டெல்லியில் போராடும் விவசாயிகள், தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும்அவர் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில், விவசாய சங்கத் தலைவர்களில்ஒருவரான ராகேஷ் திகைத், விவசாயிகளின்போராட்டம் திரும்பப் பெறப்படாதுஎன அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாகஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "போராட்டம் திரும்பப் பெறப்படாது. நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் இரத்துசெய்யப்படும் நாளுக்காக நாங்கள் காத்திருப்போம். குறைந்தபட்ச ஆதார விலையைத் தவிர, விவசாயிகளின்மற்ற பிரச்சனைகள் குறித்தும்அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என கூறியுள்ளார்.

farm bill Farmers Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe