Skip to main content

கோரிக்கை வைத்த அமித்ஷா... நிபந்தனை விதித்த விவசாயிகள்... ஸ்தம்பிக்கும் டெல்லி!!!

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

farmers conditions to center on delhi chalo rally

 

 

விவசாயிகள் போராட்டம் குறித்து அமித்ஷா வைத்த வேண்டுகோளை ஏற்க விவசாயிகள் மறுத்துள்ளனர். 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்குக் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள 'டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின் புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விவசாயிகள் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி புறநகர் பகுதி முழுதும் ஸ்தம்பித்துள்ளது.  

 

இந்நிலையில், விவசாயிகள் புராரி பகுதியில் போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என்றும், அப்படி செய்தால் மத்திய அரசு நிர்ணயித்த தேதிக்கு (டிச.3) முன்பாகவே விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமித்ஷாவின் இந்த கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுத்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகள் விவகாரத்துக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகத்தின் தலையீடு என்பது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மறைமுகமாக மிரட்டும் விதமாகவே இருக்கிறது. இந்த அணுகுமுறையை மத்திய அரசு முதலில் கைவிட வேண்டும்.

 

விவசாய அமைப்புகளுடன் மத்திய அமைச்சர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களால் இந்த விஷயத்துக்கு நேரடியாகத் தீர்வு காண முடியும் என நாங்கள் நம்பவில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது, டெல்லியில் அன்னா ஹசாரே குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரத்தியேக மத்திய அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டது. அவர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அமைச்சரவைக் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும். மிக முக்கியமாக, எந்த முன்நிபந்தனையும் இன்றி விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒருபோதும் உடன்பட மாட்டோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார். 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.